search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ஐகோர்ட்"

    2010-ம் ஆண்டு தலித் தந்தை - மகள் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டு விடுவித்த 20 பேரை குற்றவாளி என அறிவித்த ஐகோர்ட் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MirchpurDalitKilling #DelhiHC
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜாட் இனத்தவர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் நடந்த மோதலில், மிர்ச்பூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு ஜாட் பிரிவினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில், 70 வயது நபர் அவரது 16 வயது மாற்றுத்திறனாளி மகள் எரித்து கொல்லப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 5 பேர் சிறுவர்கள். வழக்கு விசாரணையின் போதே ஒருவர் இறந்து விட்டார்.

    கடந்த 2011 செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி விசாரணை கோர்ட், மொத்தமுள்ள 97 பேரில் 15 பேரை தண்டித்தும், 82 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. தண்டிக்கப்பட்ட 15 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட், திட்டமிட்டே தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டுள்ளது என கூறி 15 பேரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கீழ்கோர்ட் விடுவித்த 82 பேரில் 20 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
    மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி :

    உயர்பதவிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் கார்களில் நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக அரசு சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நியாய பூமி எனும் அமைப்பின் சார்பில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    டெல்லி ஐகோர்டின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். 

    மேலும், உயர்பதவிகளில் இருப்பவர்களான ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் உள்பட சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும். எனவே, தாங்கள் பயன்படுத்தும் கார்களில் சட்டப்படி நம்பர் பிளேட் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  
    2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை செய்யப்பட்டதையடுத்து எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    புதுடெல்லி:

    2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்தது.

    இதை எதிர்த்து, சி.பி.ஐ.யும், மத்திய அமலாகத்துறையும் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தன. இதில் சி.பி.ஐ. மனு நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “2ஜி அலைக்கற்றை முறைகேட்டால் மத்திய அரசுக்கு மிகப்பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்த ஊழல் நாட்டுக்கே தலைகுனிவாகவும் அமைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இதை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டார்.

    இதையடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 6-ந்தேதிக்கும் நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
    ×